செய்திகள்

கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு - அதிர்ச்சியில் விசைத்தறி தொழிலாளி உயிரிழப்பு

கருணாநிதிக்கு உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதை அறிந்து மனமுடைந்த விசைத்தறி தொழிலாளி இன்று திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

மாலை மலர்

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், நடராஜாநகர் பகுதியை சேர்ந்தவர் சேகர்மணி (வயது 75). விசைத்தறி தொழிலாளி. இவர் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் ஆதரவாளர் ஆவார்.

மேலும் இவர் உதயசூரியன் நாடகமன்றத்தின் தலைவராக இருந்து வந்தார். கருணாநிதி உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதை அறிந்து சேகர்மணி மனமுடைந்தார். மேலும் அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து பல்வேறு தகவல்கள் பரவியது.

இந்த நிலையில் கவலையுடன் இருந்த சேகர்மணிக்கு இன்று அதிகாலையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார். இதையறிந்த தி.மு.க.வினர் அவரது வீட்டிற்கு சென்று உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.