திமுக தலைவர் கருணாநிதி சிறுநீர் தொற்று காரணமாக கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதி இன்னும் 2 நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார் என டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.