ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தென் மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி இனி நாடாளுமன்ற தேர்தலில் எந்த வெற்றியும் பெற முடியாது.
அரசியல் நாகரீகம் கருதி முன்னாள் பிரதமர் தேவேகவுடா, கர்நாடக முதல்- மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு மு.க. ஸ்டாலினை அழைத்து இருக்கிறார். அவர் பங்கேற்பார் என்று நினைக்கிறேன்.
ஒரு திருமண நிகழ்ச்சி, பதவி ஏற்பு நிகழ்ச்சி போன்றவற்றில் கலந்து கொள்வதையும் காவிரி நீர் பிரச்சினையையும் சம்பந்தப்படுத்தக்கூடாது.