தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள சீகலஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். கட்டிட மேஸ்திரி. இவர் பெங்களூருவில் தங்கி வேலை பார்த்து வருகிறார். தற்போது இவருடைய வீட்டில் கிருஷ்ணனின் சித்தி ஈஸ்வரி, தனது மகன், மகள் ஆகிய 3 பேரும் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு இவர்கள் 3 பேரும் வீட்டை பூட்டி விட்டு வெளியே படுத்து தூங்கினர். வீட்டு சாவியை ஈஸ்வரியின் தலையணைக்கு அடியில் வைத்து இருந்துள்ளார்.
இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். அப்போது மர்ம நபர்கள் நோட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.