செய்திகள்

காலாப்பட்டு பல்கலைக்கழகத்தில் காவலாளி மயங்கி விழுந்து மரணம்

காலாப்பட்டு பல்கலைக் கழகத்தில் காவலாளி மயங்கி விழுந்து இறந்து போனார்.

மாலை மலர்

சேதராப்பட்டு:

புதுவை முதலியார்பேட்டை அன்சாரி துரை சாமிநகரை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 49). இவர் காலாப்பட்டு மத்திய பல்கலைக்கழகத்தில் தனியார் நிறுவன காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று காலை வழக்கம் போல் பல்கலைக்கழக 2-வது வாயிலில் ரங்கநாதன் காவல்பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.

அப்போது திடீரென ரங்கநாதன் மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்த மற்ற காவலாளிகள் ரங்கநாதனை மீட்டு பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ரங்கநாதன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ரங்கநாதன் மனைவி பூங்குழலி காலாப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் வழக்குபதிவு செய்து ரங்கநாதன் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.