கடந்த 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்ததை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்தது. அப்போது வன்முறை ஏற்பட்டதில் மாணவர்கள் மீது தாக்குதல், காருக்கு தீ வைத்தது போன்றவை நடந்தது.
இது தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இவர், இன்று இறுதிக்கட்ட விசாரணையை மதுரையில் தொடங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரையில் 14வது முறையாக இறுதி விசாரணை 3 நாட்கள் நடைபெறுகிறது, 112 பேரிடம் விசாரணை செய்யப்பட உள்ளது. 14வது கட்டமாக நடைபெறும் விசாரணையோடு மதுரையில் விசாரணை நிறைவு பெறும். விசாரணையில் காவல்துறை மற்றும் போராட்டக்காரர்கள் என இரு தரப்பினருக்கும் ஆதரவாக சாட்சியம் மற்றும் ஆவணங்கள் கொடுக்கப்பட்டு உள்ளது.
போராட்டத்தில் ஒசாமா பின்லேடன் படத்தினை போராட்ட களத்தில் வைத்து இருந்தது தெரியவந்தது. பிரமாண பத்திரம் தாக்கல் செய்தவர்கள் கூட விசாரணைக்கு வர மறுத்து விசாரணைக்கு வரவில்லை.