செய்திகள்

காஷ்மீர்: தடையை மீறி பேரணி- பிரிவினைவாதி யாசின் மாலிக் மீண்டும் கைது

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று தடையை மீறி ஐ.நா. சபை அலுவலகத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற பிரிவினைவாதி யாசின் மாலிக்கை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலம் முழுவதும் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்களை கண்டித்து பேரணிகள், ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடத்தப் போவதாக இங்குள்ள சையத் அலி ஷா ஜீலானி, மிர்வாய்ஸ் உமர் பரூக், முஹம்மது யாசின் மாலிக் ஆகியோர்களின் அமைப்புகளை உள்ளடக்கிய பிரிவினைவாத அமைப்புகளின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.