செய்திகள்

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பை பொறுத்துக்கொள்ள முடியாது - அமெரிக்கா

தென்சீனக் கடலில் செயற்கை தீவுகளை அமைத்து ராணுவ தளங்களை அமைத்து வரும் சீனாவின் செய்கைகளை பொறுத்துக்கொள்ள முடியாது என அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் ஜிம் மேட்டிஸ் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

தென்சீனக் கடலில் செயற்கை தீவுகளை அமைத்து ராணுவ தளங்களை அமைத்து வரும் சீனாவின் செய்கைகளை பொறுத்துக்கொள்ள முடியாது என அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் ஜிம் மேட்டிஸ் தெரிவித்துள்ளார்.

தென்சீனக் கடல் பகுதியில் உள்ள சில தீவுகளை சொந்தம் கொண்டாடுவதில் பிலிப்பைன்ஸ், வியட்நாம், சீனா ஆகிய நாடுகளுக்கிடையே பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. இப்பிரச்சனை தொடர்பாக சர்வதேச தீர்ப்பாயத்தில் சில வழக்குகளும் நிலுவையில் உள்ளது.

இந்தக் கடல் பரப்பில் அவ்வப்போது ராணுவப் பயிற்சிகளை சீன அரசானது மேற்கொள்ளும். இதனால், சர்வதேச நாடுகளின் கண்டனத்திற்கு சீன அரசு ஆளாகும். மேலும், சர்வதேச நாடுகளின் கண்டனங்களை புறம் தள்ளிவிட்டு சீன அரசானது, கடல் பகுதிகளில் செயற்கைத் தீவுகளை அமைத்து, அத்தீவின் மீது ராணுவத் தளங்களை உருவாக்கி வருகின்றது.