பாஜகவில் இணைந்த எம்.எல்.ஏ.க்களுடன் ஜார்கண்ட் முதல்வர் 
செய்திகள்

ஜார்க்கண்டில் 6 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் சேர்ந்தனர்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் எதிர்கட்சிகளை சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் இன்று ஆளும் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்.

மாலை மலர்

ஜார்க்கண்ட மாநிலத்தில் ரகுபர்தாஸ் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. 81 உறுப்பினர்களை கொண்ட அந்த மாநில சட்டசபையின் பதவிக்காலம் டிசம்பர் 27-ந் தேதி முடிகிறது. அங்கு டிசம்பரில் தேர்தல் நடத்தப்படவுள்ளது.

இந்த நிலையில் எதிர்கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 6  பேர் இன்று பா.ஜனதாவில் இணைந்தனர்.