செய்திகள்

ஜப்பானில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது

ஜப்பான் நாட்டில் 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, அந்நாட்டு அரசு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாலை மலர்

டோக்கியோ:

ஜப்பான் நாட்டின் யமகட்டாவின் சுரோகாவில் 6.8 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, யமகட்டா, நிகாட்டா மற்றும் இஷிகாவா பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது 

மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அந்நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல்கள் வெளியாகவில்லை.