சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் உள்ள அண்ணாவின் நினைவிடத்தின் அருகில் இடம் தர தமிழக அரசு மறுத்துள்ளது. அதற்கு சட்டரீதியாக பல்வேறு காரணங்களையும் தெரிவித்துள்ளது.
இதையடுத்து திமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்திலும் வன்முறையிலும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த வைகோ, கோடான கோடி உள்ளங்களை கண்ணீரில் ஆழ்த்திவிட்டு கலைஞர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், அண்ணா நினைவிடத்தில் இடம்தர மறுப்பது நியாயமற்றது எனவும், இடம் தர வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். #RIPKalaignar #Karunanidhi #DMK #கலைஞர்