செய்திகள்

ஐதராபாத் விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டாக்களுடன் இத்தாலி தொழிலதிபர் கைது

ஐதராபாத் விமான நிலையத்திற்கு துப்பாக்கி தோட்டாக்களுடன் வந்த இத்தாலி தொழிலதிபர் கைது செய்யப்பட்டார். #HyderabadAirport #ItalianBusinessmanArrested

மாலை மலர்

ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும் விமானம் நேற்று புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்யும் பயணிகளின் உடமைகளை சிஐஎஸ்எப் வீரர்கள் சோதனை செய்தனர்.

அப்போது இத்தாலியைச் சேர்ந்த தொழிலதிபர் நிகோல் சங்கர்மனோ என்பவரின் லக்கேஜை சோதனையிட்டபோது, அதில் பயன்படுத்தப்படாமல் உயிர்ப்புடன் 22 தோட்டாக்களும், பயன்படுத்தப்பட்ட 3 தோட்டாக்களும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர் ஆயுத தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டார்.