செய்திகள்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் அகில் ஷெரான் தங்க பதக்கம் வென்றார்

மெக்சிகோவின் கவுடலஜாரா நகரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் அகில் ஷெரான் தங்கப் பதக்கம் வென்றார்.

மாலை மலர்

மெக்சிகோவின் கவுடலஜாரா நகரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் அகில் ஷெரான் தங்கப் பதக்கம் வென்றார்.

ISSF - சர்வதேச சூட்டிங் ஸ்போர்ட்ஸ் பெடரேசன் சார்பில் நடத்தப்படும் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி மெக்சிகோவின் கவுடலஜாரா நகரில் நடைபெற்று வருகிறது.

இந்தத் தொடரில், நேற்று நடந்த ஆண்களுக்கான 50 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு போட்டியில் இந்தியாவின் அகில் ஷெரான் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

இந்த போட்டியில் ஆஸ்திரிய வீரர் பெர்ன்ஹார்ட் பிக் வெள்ளி பதக்கமும், ஹங்கேரியை சேர்ந்த இண்ட்வான் பெனி வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

இத்துடன் சேர்த்து உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா 4 தங்க பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.