இஸ்ரோ தலைவர் சிவன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜி.எஸ்.எல்.வி-எப் 11 ராக்கெட் மூலமாக ஜி.சாட்7ஏ செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. கடந்த 35 நாட்களில் 3-வது செற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
இது 3-வது தொலைதொடர்பு செயற்கைகோள். நவீன தொழில்நுட்பத்துடன் 6 மாதம் கூடுதலாக இயங்கக்கூடியது. அடுத்த வருடம் இன்னும் அதிகமான செயற்கைகோள்களை விண்ணில் ஏவ திட்டமிட்டிருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். #ISRO #ISROChairman