செய்திகள்

சிரியா தலைநகரத்தின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

சிரியா நாட்டின் தலைநகரமான டமாஸ்கஸ் மீது இஸ்ரேல் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. தங்களை தாக்கவந்த ஏவுகணையை தாக்கி அழித்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. #Israelimissileattack #missileattack #Damascusmissileattack

மாலை மலர்

டமாஸ்கஸ்:

சிரியா நாட்டின் தலைநகரமான டமாஸ்கஸ் நகரில் உள்ள ராணுவ தளத்தின் மீது இஸ்ரேல் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக சிரியா அரசு குற்றம்சாட்டியுள்ளது. இந்த தாக்குதலில் அந்த ராணுவ தளம் சேதமானதாகவும் மூன்று வீரர்கள் காயமடைந்ததாகவும் உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

ஆனால், இதற்கு இஸ்ரேல் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. சிரியாவில் இருந்து தங்கள் நாட்டை தாக்கவந்த ஏவுகணைகளை டமாஸ்கஸ் அருகே நாங்கள் வழிமறித்து சுட்டு வீழ்த்தினோம் என இஸ்ரேல் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. #Israelimissileattack #missileattack #Damascusmissileattack