சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்துவரும் ரஷியாவை சேர்ந்த அதிகாரியின் தலையை துண்டித்து ஐ.எஸ். தீவிரவாதிகள் கொன்ற வீடியோ காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக போராடி வரும் புரட்சிப் படையினர் மற்றும் அங்கு அதிரடி தாக்குதல்களின் மூலம் பலரை கொன்று குவித்து, அட்டூழியத்தில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆகியோருக்கு எதிரான வான்வழி தாக்குதலில் ரஷியா ஈடுபட்டு வருகிறது.
இதனால், ரஷியாவை முக்கிய எதிரியாக கருதும் ஐ.எஸ். தீவிரவாதிகள் ரஷியாவை சேர்ந்த விமானப்படை வீரர்களையும், உயரதிகாரிகளையும் பிணையக்கைதியாக சிறைபிடித்து வைத்துள்ளனர். கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் பிணைகைதிகளில் 30 பேரை அவர்கள் கொன்று குவித்துள்ளனர்.
கோப்புப்படம்