10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கடந்த மாதம் 29-ந்தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்திய கால்பந்து அணி சீனாவுடன் சர்வதேச நட்புறவு போட்டியில் ஆடியதால் அதற்கு ஏற்றவாறு ஐ.எஸ்.எல். தொடரில் 10 நாட்கள் இடைவெளி விடப்பட்டு இருந்தது.