மும்பை:
இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் யூசுப்பதான். ஊக்க மருந்து விவகாரத்தில் இவருக்கு 5 மாதம் தடை விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதியில் இருந்து இந்த தடை தொடங்கியது. வருகிற 14-ந் தேதியுடன் இந்த தடை முடிவடைவதால் ஐ.பி.எல். போட்டியில் ஆடுவார்.
வருகிற 26-ந் தேதி, 27-ந் தேதி நடைபெறும் ஐ.பி.எல். ஏலத்தில் அவர் இடம் பெறுவார். அவரது அடிப்படை விலை ரூ.75 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதிகப்பட்ச அடிப்படை விலையான ரூ.2 கோடி பட்டியலில் காம்பீர், ஹர்பஜன்சிங் இடம் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.