டெல்லி அணியின் சஞ்சு சாம்சன், பில்லிங்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தொடக்க ஓவரிலேயே டெல்லி அணிக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. சந்தீப் ஷர்மா வீசிய அந்த ஓவரின் கடைசி பந்தில் பில்லிங்ஸ் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்.
அடுத்து கருண் நாயர் களம் இறங்கினார். 3-வது ஓவரின் 5-வது பந்தில் சஞ்சு சாம்சன் 5 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். 5-வது ஓவரின் கடைசி பந்தில் ஷ்ரேயாஸ் அய்யர் 6 ரன்னில் வெளியேறினார். இந்த மூன்று விக்கெட்டுக்களை சந்தீப் ஷர்மா வீழ்த்தினார்.
தொடக்கத்திலேயே விக்கெட்டுக்களை இழந்த டெல்லி அணி, அதிலிருந்து மீண்டு வரமுடியவில்லை. கருண் நாயர் (11), ரிஷப் பந்த் (3), கோரி ஆண்டர்சன் (18), கிறிஸ் மோரிஸ் (2), ரபாடா (11) அடுத்தடுத்து ஆட்டமிழக்க டெல்லி டேர்டெவில்ஸ் அணி 17.1 ஓவரில் 67 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட் ஆனது.
பஞ்சாப் அணி சார்பில் சந்தீப் ஷர்மா 3 விக்கெட்டும், அக்சார் பட்டேல், வருண் ஆரோன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்.