செய்திகள்

ஐ.பி.எல்.: சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 15 கோடி ரூபாய் பரிசுத் தொகை

ஐ.பி.எல். தொடரின் இன்றைய இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 15 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட இருக்கிறது.

மாலை மலர்

ஐ.பி.எல். சீசன் 10 தொடரின் இறுதிப் போட்டி இன்று ஐதராபாத்தில் நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் - ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு பரிசுத் தொகையாக 15 கோடி ரூபாய் வழங்கப்பட இருக்கிறது. 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு 10 கோடி ரூபாய் வழங்கப்பட இருக்கிறது.