செய்திகள்

குல்தீப் யாதவை நீக்கியது ஏன்?: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தலைமை பயிற்சியாளர் கல்லிஸ் விளக்கம்

ஈடன் கார்டன் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான வகையில் இல்லை. அதனால் குல்தீப் யாதவ் இடம் பெறவில்லை என கல்லீஸ் தெரிவித்துள்ளார். #IPL2019 #KKR #kuldeepYadav

ஆர்சிபி-க்கு எதிரான ஆட்டத்தில் 59 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் கடைசி மூன்று போட்டிகளில் அவர் களம் இறக்கப்படவில்லை. உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள அவருக்கு இது பாதிப்பை ஏற்படுத்துமோ? என்று கருகிறார்கள்.

ஆனால், டி20 போட்டி என்பது வேறு. 50 ஓவர்கள் உலகக்கோப்பை என்பது வேறு என்று கல்லிஸ் தெரிவித்துள்ளார். குல்தீப் யாதவ் குறித்து கல்லிஸ் கூறுகையில் ‘‘இந்த சீசனுக்கான ஈடன் கார்டன் ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு மிகவும் கடினமாக இருந்தது. குல்தீப் யாதவுக்கு இந்த வருடம் மிகவும் கடினமானது. ஆனால், இதில் இருந்து அவர் பாடம் கற்றுக்கொள்வார். 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து 50 ஓவர் கிரிக்கெட் முற்றிலும் மாறுபட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.