செய்திகள்

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க இப்படியும் ஒரு வழி இருக்கிறது- ஐபிஎஸ் அதிகாரி ரூபா தகவல்

வாக்காளர்களுக்கு சப்பாத்திக்குள் பணத்தை மறைத்து வைத்து கொடுக்க வாய்ப்பு உள்ளதாகவும், இதனை அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் ஐபிஎஸ் அதிகாரி ரூபா வேண்டுகோள் விடுத்துள்ளார். #LokSabhaElections2019 #RoopaIPS #CashForVote

மாலை மலர்

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் விடிய விடிய சோதனை செய்து பல வகைகளில் யோசித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் தேர்தல் ஆணையத்தை விட பல மடங்கு அரசியல்வாதிகள் யோசித்து வருகின்றனர். பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வெவ்வேறு வழிகளில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யப்படலாம். அவ்வகையில், இப்போது சமூக வலைத்தளம் மூலம் பரவும் ஒரு வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த வீடியோவை கர்நாடகாவை சேர்ந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா, தனது டுவிட்டரில் பதிவிட்டு, தனது கருத்தையும் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில், சப்பாத்தி மாவை உருட்டும் பெண் ஒருவர், அதற்குள் ரூபாய் நோட்டை வைத்து உருட்டி சப்பாத்தி செய்கிறார். பின்னர் அடுப்பில் வேக வைத்த அந்த சப்பாத்தியை பிரித்து பார்த்தால், ரூபாய் நோட்டு எந்தவித சேதமும் இன்றி அப்படியே இருக்கிறது.