உத்தரப்பிரதேசம் மாநிலம், ஆக்ரா நகரில் உள்ள மொஹல்லா கச்சேரா பகுதியை சேர்ந்த ஒரு பெண் நேற்று மாலை தனது வீட்டு வாசலில் அமர்ந்தவாறு பிறந்து பன்னிரெண்டே நாளான தனது ஆண் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு பாய்ந்தோடி வந்த ஒரு குரங்கு அந்தப் பெண்ணின் அரவணைப்பில் இருந்த குழந்தையை கண்ணிமைக்கும் நேரத்துக்குள் பறித்துச் சென்றது. இதனால் பதறிப்போன அந்த தாயின் கூக்குரலை கேட்ட குடும்பத்தினர் வெளியே ஓடிவந்து, குரங்கை விரட்டிச் சென்றனர்.
அவர்களிடம் பிடிபடாமல் மரங்களின்மீதும் வீடுகளின்மீதும் குழந்தையுடன் தாவியேறிச் சென்ற குரங்கு மறைந்து விட்டது.
இந்நிலையில், அருகாமையில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் அந்த குழந்தை கடிபட்ட காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்ட உறவினர்கள் அதை மீட்டெடுத்து அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.