ரிஷப் பந்த் 
செய்திகள்

அதிரடியில் கலக்கிய ஷ்ரேயாஸ் அய்யர், ரி‌ஷப் பண்ட்

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான போட்டியில் 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஷ்ரேயஸ் அய்யர்- ரி‌ஷப் பண்ட் அதிரடியாக விளையாடினர். அவர்கள் 24 பந்தில் 73 ரன் குவித்தனர்.

மாலை மலர்

சேஸ் வீசிய 47-வது ஓவரில் ஷ்ரேயாஸ் அய்யர் 4 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில் 31 ரன் எடுக்கப்பட்டது. ஒரு ஓவரில் இந்தியா எடுத்த அதிகபட்ச ரன் இதுவாகும்.

இதற்கு முன்பு நியூசிலாந்துக்கு எதிராக (1999-ம் ஆண்டு) தெண்டுல்கர்- அஜய் ஜடேஜா ஜோடி ஒரு ஓவரில் 28 ரன் எடுத்து இருந்தது. அரைசதம் அடித்த ஷ்ரேயாஸ் அய்யர் 32 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 53 ரன்கள் சேர்த்தார்.