செய்திகள்

14.5 ஓவரிலேயே 105 ரன்னை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி- தொடரை 3-1 என வென்றது

கடைசி ஒருநாள் போட்டியில் 14.5 ஓவரிலேயே 105 ரன்களை எட்டி இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 3-1 என கைப்பற்றியது. #INDvWI

மாலை மலர்

பின்னர் 105 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக தவான், ரோகித் சர்மா ஆகியோர் களம் இறங்கினார்கள். வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை முதலில் சந்திக்க இருவரும் திணறினார்கள். தவான் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தில் வெளிப்படுத்தியது. ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.