செய்திகள்

இந்தியா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு: ரகானே, மணீஷ் பாண்டே, குல்தீப் யாதவிற்கு இடமில்லை

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளது. ரகானே, மணீஷ் பாண்டே, குல்தீப் யாதவிற்கு இடம் கிடைக்கவில்லை.

மாலை மலர்

தம்புல்லாவில் 2.30 மணிக்கு தொடங்க இருக்கும் முதல் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய கேப்டன் விராட் கோலி டாஸ் வென்றார். இலங்கைக்கு எதிராக தொடர்ந்து நான்காவது முறையாக விராட் கோலி டாஸ் வென்றுள்ளார்.

டாஸ் வென்ற விராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ரகானே, மணீஷ் பாண்டே, குல்தீப் யாதவ் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.

இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. ரோகித் சர்மா, 2. தவான், 3. விராட் கோலி, 4. லோகேஷ் ராகுல், 5. டோனி, 6. கேதர் ஜாதவ், 7. ஹர்திக் பாண்டியா, 8. அக்சார் பட்டேல், 9. புவனேஸ்வர் குமார், 10. பும்ப்ரா, 11. சாஹல்.

இலங்கை அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-