பிலாண்டர், மகாராஜ், ஜடேஜா 
செய்திகள்

புனே டெஸ்ட்: ஒரு வழியாக தென்ஆப்பிரிக்காவை 275 ரன்னில் சுருட்டியது இந்தியா

அஸ்வினின் தொடர் முயற்சியால் 3-வது நாள் முடிவில் தென்ஆப்பிரிக்காவை 275 ரன்னில் ஆல்-அவுட் ஆக்கியது இந்தியா.

மாலை மலர்

பின்னர் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா இன்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 162 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுக்களை இழந்து திணறியது.

9-வது விக்கெட்டுக்கு பிலாண்டர் உடன் மகாராஜ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்தியாவின் பந்து வீச்சாளர்களை மிகப்பெரிய அளவில் சோதித்தது. இருவரும் நிலைத்து நின்று விளையாடினர். மகாராஜ் அரைசதம் அடித்தார். பிலாண்டர் பந்துகளை தடுத்தாடுவதில் முனைப்பு காட்டினார்.

மகாராஜ் - பிலாண்டர் ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 42.1 ஓவர்கள் விளையாடி 109 ரன்கள் குவித்தது. அடுத்து வந்த ரபாடா 2 ரன்னில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா 275 ரன்னில் ஆல்அவுட் ஆனது.