செய்திகள்

வங்காள தேச வீரர்கள் அணியாக போராடும் உத்வேகம் படைத்தவர்கள்- தினேஷ் கார்த்திக்

வங்காள தேச வீரர்கள் அணியாக போராடும் உத்வேகம் படைத்தவர்கள் என்று இந்திய அணி விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். #nidahasTrophy #INDvBAN

மாலை மலர்

இறுதிப் போட்டி நாளை இரவு 7 மணிக்கு கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறுகிறது. வங்காள தேச அணி இதுவரை டி20 கிரிக்கெட்டில் இந்தியாவை வீழ்த்தியது கிடையாது. நாளையும் இந்த சாதனை தொடரும் என்ற நம்பிக்கையில் இந்திய ரசிகர்கள் இருக்கும் நிலையில், வங்காள தேச அணியை எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டோம் என்று இந்திய அணி விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

இதுகுறித்து தினேஷ் கார்த்திக் கூறுகையில் ‘‘வங்காள தேச வீரர்கள் ஒரு அணியாக போராடும் உத்வேகம் உடையவர்கள். அவர்கள் கடின முயற்சியை மேற்கொள்வார்கள். அவர்கள் நீண்ட காலத்திற்கு முன்பு டெஸ்ட் அந்தஸ்து பெறவில்லை. குறுகிய காலத்திற்குள் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் முன்னேறியுள்ளனர்.