செய்திகள்

சிங்கப்பூரில் கடற்படை ஊழல் வழக்கில் இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறை

சிங்கப்பூர் நாட்டில் அமெரிக்க கடற்படை ஒப்பந்த நிபுணரான இந்திய வம்சாவளி பெண் ஊழலில் ஈடுபட்டதால் 3 ஆண்டுகள் சிறை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Singapore

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் வாழும் இந்திய வம்சாவளி பெண்ணான குர்ஷரன் கவுர் சரோன் ரசேல் என்பவர் அமெரிக்க கடற்படை ஒப்பந்தங்கள், கணக்குகளை நிர்வகிக்கும் நிபுணராக இருந்து வந்தார். அவர் பதவி வகித்த காலத்தில் தனியார் கப்பல் நிறுவனத்திடம் இருந்து சுமார் 65 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக சிங்கப்பூர் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் குர்ஷரன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, அவருக்கு 33 மாதங்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நீதிபதி சஃபியுதீன் சருவான் அதிகாரத்தையும், நம்பிக்கையும் குர்ஷரன் தவறாக பயன்படுத்திவிட்டார் என கூறியுள்ளார். #Singapore