விஜய்வர்மா, ராஜ்குமார் 
செய்திகள்

கேரளா வெள்ளத்தில் கர்ப்பிணியை காப்பாற்றிய கப்பல்படை கேப்டன்களுக்கு விருது- சிங்கப்பூர் அரசு வழங்கியது

கேரளாவில் வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணியை காப்பாற்றிய கப்பல்படை கேப்டன்களான விஜய் வர்மா, ராஜ்குமார் ஆகியோரின் வீர செயலை பாராட்டி சிங்கப்பூர் அரசு அவர்களுக்கு விருது வழங்கி உள்ளது. #KeralaRain #KeralaFlood

மாலை மலர்

கேரளாவில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக அந்த மாநிலமே பெரும் பாதிப்பை சந்தித்தது.

மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பியதால் பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக கேரளாவில் உள்ள அனைத்து மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதந்தது.

இதைத் தொடர்ந்து கேரளாவில் மீட்பு பணியில் முப்படைகளும் ஈடுபடுத்தப்பட்டன. கேரள மீனவர்களும் படகு மூலம் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

கேரள மாநிலம் ஆலுவா செங்கமனநாடு என்ற இடத்தில் ஒரு வீட்டின் மொட்டை மாடியில் தவித்த நிறைமாத கர்ப்பிணி சஜிதா என்பவரை ஹெலிகாப்டர் மூலம் இந்திய விமானப்படை கேப்டன்கள் விஜய் வர்மா, ராஜ்குமார் ஆகியோர் காப்பாற்றினார்கள்.

ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட சஜிதா, குழந்தையுடன் சஜிதா