இந்தியா, இலங்கை, வங்காள தேச அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் இலங்கையில் நடக்கிறது. இந்த தொடர் 6-ந்தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கு நிதாஹாஸ் டிராபி எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதற்கான இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இந்திய அணியின் முன்னணி வீரர்கள் தென்ஆப்பிரிக்கா தொடரில் தொடர்ந்து விளையாடியதன் காரணத்தாலும், ஐபிஎல் தொடருக்குப்பின் தொடர்ந்து வெளிநாட்டு தொடர்கள் இருப்பதாலும் கேப்டன் விராட் கோலி, விக்கெட் கீப்பர் டோனி, ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, புவனேஸ்வர் குமார், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையில் இந்தியா தொடரை சந்திக்கிறது.