இந்தியா - நியூசிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நேற்று நடந்தது. இதில், முதல் 2 ஆட்டங்களில் இடம் பெறாத இந்திய மூத்த வீராங்கனை மிதாலிராஜூக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுக்கு 161 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சோபி டேவின் 72 ரன்கள் (8 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார்.