தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரிலும் சிறப்பான வகையில் பந்து வீசு வருகிறார்.
நான் சிறப்பான வகையில் பந்து வீசுவதற்கு ஜாகீர்னானின் அறிவுரைதான் காரணம் என்று உமேஷ் யாதவ் கூறியுள்ளார்.
இதுகுறித்து உமேஷ் யாதவ் கூறுகையில் ‘‘தவறுகளில் இருந்து நான் தொடர்ச்சியாக பாடம் கற்றுக்கொண்டு வருகிறேன். இளைஞர்களாக உள்ளவர்கள் தவறுகள் செய்ய வாய்ப்புள்ளது. ஆனால், ஜாகீர்கான் ஒரு விஷயம் சொன்னார், அது என்னவெனில், ‘‘ஜூனியராக இருக்கும்போதும், இந்திய அணிக்கு புதிய வீரர்களாக அறிமுகமாகும்போதும், உங்களுடைய தவறுகளில் இருந்து வேகமாக பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அப்படி செய்தால் உங்களுக்கு சிறந்ததாக இருக்கும்’’ என்பதுதான். அதை நான் முயற்சி செய்து நடைமுறைபடுத்திக் கொண்டிருக்கிறேன்.