இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான பிங்க்-பால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.
முதல்முதலாக இந்திய அணி பிங்க்-பால் டெஸ்டில் விளையாடியதால் ஈடன் கார்டனில் ரசிகர்கள் குவிந்தனர். முதல் நான்கு நாட்களுக்கான அனைத்து டிக்கெட்டுக்களும் விற்று தீர்ந்தன. ஐந்தாவது நாட்களுக்கான டிக்கெட் ஓரளவிற்கு விற்றிருந்தன.
போட்டி இரண்டரை நாட்களுக்குள் முடிந்ததால், நான்காவது மற்றும் ஐந்தாவது நாள் போட்டியை பார்க்க டிக்கெட் எடுத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில் கடைசி இரண்டு நாட்களுக்கு கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்கு டிக்கெட் எடுத்திருந்த ரசிகர்களுக்கு பணம் திருப்பி வழங்கப்படும் என பெங்கால் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், அதற்கான வேலைகளை தொடங்கிவிட்டோம் என்றும் தெரிவித்துள்ளது.