கேஎல் ராகுல் 
செய்திகள்

ராகுல், ரோகித் அரை சதம் - இந்திய அணி பொறுப்பான ஆட்டம்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அரை சதமடிக்க, இந்திய அணி சிறப்பாக ஆடி வருகிறது.

விசாகப்பட்டினம்:

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று பகல்-இரவு மோதலாக நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும் கேஎல் ராகுலும் களமிறங்கினர். 

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இருவரும் ரன்களை ஒன்று, இரண்டு என ரன்களை எடுத்தனர். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளையும் அடிக்க தவறவில்லை. இதனால், இந்திய அணி 11 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய ராகுல் 5-வது அரை சதமடித்து அசத்தினார். அவரை தொடர்ந்து, ரோகித் சர்மாவும் 43வது அரை சதமடித்தார்.

இந்திய அணி 24 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 139 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் 74 ரன்னுடனும், ரோகித் சர்மா 62 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.