செய்திகள்

கணவன் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தால் ‘வெளுக்க’ மணமக்களுக்கு பேட் பரிசளித்த மந்திரி

மத்தியப்பிரதேசத்தில் குடித்துவிட்டு கணவன் வீட்டுக்கு வந்தால் மனைவி அடிப்பதற்காக புதிதாக திருமணமான மணமக்களுக்கு மரக்கட்டையால் ஆன பேட்டை பரிசாக மந்திரி ஒருவர் வழங்கியுள்ளார்.

மத்தியப்பிரதேசத்தில் அம்மாநில அரசின் சார்பில் சுமார் 700 ஜோடிகளுக்கு திருமணம் நேற்று நடைபெற்றது. இத்திருமணத்தில் பங்கேற்ற அம்மாநில மந்திரி கோபால் பார்கவா அனைத்து ஜோடிகளுக்கும் மரத்திலான சிறிய பேட் ஒன்றை பரிசாக வழங்கினார்.

அந்த பேட்டில் ” குடிப்பவர்களை அடிப்பதற்காக, போலீஸ் தலையிடக்கூடாது” என எழுதப்பட்டுள்ளது. இந்நிகழ்சியில் பேசிய கோபால் பார்கவா ,” குடித்துவிட்டு கணவன் வீட்டுக்கு வரும் போது இந்த கட்டைதான் பேச வேண்டும். குடும்பத் தலைவன் குடித்தால் அவன் வன்முறையாளனாக மாற வாய்ப்புள்ளது. எனவேம் மனைவிகள் அதை தடுக்க வேண்டும்” எனக் கூறினார்.

SCROLL FOR NEXT