இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ - தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் மோதின. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி இந்தியா ‘ஏ’ அணியின் சூர்ய குமார் யாதவ், அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
சூர்யகுமார் யாதவ் 5 ரன்னிலும், ஈஸ்வரன் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். தொடக்க ஜோடி சொதப்பியதால், அதன்பின் வந்த முன்னணி வீரர்களால் நிலைத்து நின்று விளையாட முடியவில்லை. ஷ்ரேயாஸ் அய்யர் (7), அம்பதி ராயுடு (19), நிதிஷ் ராணா (19), குருணால் பாண்டியா (5) அடுத்தடுத்து வெளியேறினார்கள்.
கலீல் அஹமது
அதன்பின் வந்த விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் 36 ரன்களும், வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் 38 ரன்களும் அடிக்க இந்தியா ‘ஏ’ 37.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து விளையாடி 157 ரன்களில் சுருண்டது. தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணியின் டேன் பேட்டர்சன் ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.