செய்திகள்

இந்தியா ஏ அணி 197 ரன்னில் சுருண்டது- ரிஷப் பந்த் 58, ரகானே 49

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ அணி 197 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ரிஷப் பந்த், ரகானே ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடினார்கள். ENGvIND

மாலை மலர்

தொடக்க வீரர் அலஸ்டைர் குக் 180 ரன்களும், கப்பின்ஸ் 73 ரன்களும், தாவித் மலன் 74 ரன்களும் குவித்தனர். இந்தியா ‘ஏ’ அணி சார்பில் முகமது சராஜ் 4 விக்கெட்டும், நதீம் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் இந்தியா ‘ஏ’ அணி பேட்டிங்கை தொடங்கியது. பிரித்வி ஷா, முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முரளி விஜய் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மயாங்க் அகர்வால் ரன்ஏதும் எடுக்காமலும், கருண் நாயர் 4 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து பிரித்வி ஷா உடன் ரகானே ஜோடி சேர்ந்தார். அரைசதம் அடித்த பிரித்வி ஷா 62 ரன்னில் வெளியேறினார். அதன்பின் ரகானே உடன் ரிஷப் பந்த் உடன் ஜோடி சேர்ந்தார். நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா ‘ஏ’ அணி 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்திருந்தது. ரகானே 26 ரன்களுடனும், ரிஷப் பந்த் 37 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.