புதுடெல்லி:
மருமகன் மீது சி.பி.ஐ. பதிவு செய்துள்ள வழக்கு அடிப்படையற்றது என பஞ்சாப் முதல் மந்திரி அம்ரீந்தர் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த சிம்போஹோலி சர்க்கரை ஆலை நிறுவனத்துக்கு ஒரியண்டல் வங்கியில் இருந்து ரூ.97.85 கோடி வழங்கியது. இந்த கடனை திருப்பி செலுத்தாமல் அந்த நிறுவனம் மோசடி செய்தது.
இந்த சர்க்கரை ஆலை நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குனராக பஞ்சாப் காங்கிரஸ் முதல் மந்திரி அம்ரீந்தர் சிங்கின் மருமகன் குர்பால்சிங் உள்ளார். இந்த மோசடி தொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ. குர்பால் சிங் உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், மருமகன் மீது சி.பி.ஐ. பதிவு செய்துள்ள வழக்கு அடிப்படையற்றது என பஞ்சாப் முதல் மந்திரி அம்ரீந்தர் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், குர்பால் சிங் மீது சி.பி.ஐ. பதிவு செய்துள்ள வழக்கு அடிப்படையற்றது. எனது உறவினர் என்பதற்காகவே அரசியல் பழிவாங்கும் காரணமாகவே குர்பால் சிங் மீது சி.பி.ஐ. இந்த வழக்கை பதிவுசெய்துள்ளது என தெரிவித்துள்ளார். #OBCSCAM #OBCFraud #tamilnews