தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. செஞ்சூரியனில் ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜாஃப்ரா ஆர்ச்சர், சாம் கர்ரன் (ஆல்-ரவுண்டர்), பென் ஸ்டோக்ஸ் (ஆல்-ரவுண்டர்) ஆகிய ஐந்து வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது.
அனுபவ வீரர்களான ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோரால் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. அதேவேளையில் தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்தின் பேட்டிங்கை சீர்குலைத்தனர்.
இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சு தாக்கத்தை ஏற்படுத்தாததாலும், கேப் டவுன் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சற்று சாதகமாக இருப்பதாக கருதுவதாலும் ஸ்டூவர்ட் பிராட் அல்லது ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோரில் ஒருவர்தான் 2-வது டெஸ்டில் இடம் பெற வாய்ப்பு என இங்கிலாந்து பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ‘‘இங்கிலாந்து வெற்றி பெற வேண்டுமென்றால் 2-வது டெஸ்டில் பிராட் அல்லது ஜேம்ஸ் ஆண்டர்சனில் ஒருவரை நீக்கிவிட்டு, கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை சேர்க்க வேண்டும்’’ என ஆலோசனை வழங்கியுள்ளார்.