செய்திகள்

பயங்கரவாதத்தின் கோரமுகத்தை இலங்கை தேவாலயத்தில் கண்டேன் - பிரதமர் மோடி வேதனை

ஈஸ்டர் தினத்தன்று கொழும்புவில் உள்ள அந்தோணியார் தேவாலயத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் கோரமுகத்தை சமீபத்தில் இலங்கை சென்றிருந்தபோது காண முடிந்ததாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

மாலை மலர்

கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கெக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இருநாள் மாநாடு  இன்று தொடங்கியது.

இந்த மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாத தீமைகளில் இருந்து மக்களை காப்பாற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகள் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டியதன் அவசியத்தை சுட்டிக் காட்டினார்.