நெல்லை:
இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் மக்களின் ஆதரவு தி.மு.க.வுக்குத்தான் உள்ளது. நாங்குநேரி தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுமா? என்று கேட்கிறீர்கள். இது தொடர்பாக தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்து அறிவிப்பார். இங்கு காங்கிரஸ் கட்சியும் ஆலோசனை நடத்தியது, தங்களது தொண்டர்களை தயார் படுத்துவதற்குத்தான். அதேபோல் தற்போது தி.மு.க. சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது.