அப்துல்காதிர் 
செய்திகள்

அப்துல்காதிர் மறைவு பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு இழப்பு - இம்ரான்கான்

அப்துல்காதிர் மறைவு பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு இழப்பு என பிரதமரும், முன்னாள் ஆல்ரவுண்டரான இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் அப்துல்காதிர்.

1970 மற்றும் 1980-ம் ஆண்டுகளில் தனது மந்திர சுழற்பந்து வீச்சால் எதிர் அணி பேட்ஸ்மேன்களை திணறடித்தவர்.

இந்த நிலையில் அப்துல் காதிர் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 63.

லெக்ஸ் ஸ்பின்னராக அவருக்க மனைவியும், 4 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அவரது மகளை பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் உமர் அக்மல் திருமணம் செய்துள்ளார்.

அப்துல்காதிர் திடீர் மரணத்தால் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பாகிஸ்தான் பிரதமரும், முன்னாள் ஆல்ரவுண்டருமான இம்ரான்கான் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இம்ரான் கான் தனது டுவிட்டர் பதிவில் கூறி கூறியிருப்பதாவது:-

இவ்வாறு இம்ரான்கான் கூறியுள்ளார்.

இதேபோல ஜாவித் மியாண்டட், டேனிஷ் கனேரியா உள்ளிட்ட பல வீரர்களும் இரங்கல் தெரிவித்து உள்ளனர். அப்துல்காதிரின் பந்து வீச்சு ஸ்டைலை தான் வார்னே, முஸ்தாக் அகமது பின்பற்றினார்கள்.