செய்திகள்

தலைமை பயிற்சியாளருக்கு நான் ரெடி: முன்னாள் புயல் வேகப்பந்து வீச்சாளர் ஷேன் பாண்ட்

மும்பை இந்தியன்ஸ், பிரிஸ்பேன் ஹீட் அணிகளுக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த ஷேன் பாண்ட், தலைமை பயிற்சியாளர் பதவிக்கு தயார் என்று கூறியுள்ளார்.

மாலை மலர்

இந்நிலையில், நியூசிலாந்து ‘ஏ’ அணி இந்தியா வந்து இரண்டு போட்டிகள் கொண்ட நான்கு நாட்கள் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இதற்கு ஷேன் பாண்ட் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

துணை பயிற்சியாளர் பதவி அனுபவத்தின் மூலம் தன்னால் தலைமை பயிற்சியாளராக செயல்பட முடியும் என்று ஷேன் பாண்ட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஷேன் பாண்ட் கூறுகையில் ‘‘தற்போதைய இந்த நேரத்தில் நான் தலைமை பயிற்சியாளர் பதவி ஏற்பதற்கு தயாராக இருக்கிறேன். 7 வருடங்கள் துணை பயிற்சியாளராக பணியாற்றிய அனுபவம் உள்ளது.