நாகை மாவட்டம் சீர்காழியை சேர்ந்தவர் பார்வதி (வயது 54). சீர்காழி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்ற அவருக்கு நர்சு ஒருவர், இடுப்பில் ஊசி போட்டார். மருந்து முழுவதும் இறங்கிய பின்னர், ஊசியை வெளியே எடுக்க முயன்றபோது ஊசி உடைந்து உடலுக்குள் சிக்கி கொண்டது.
இதுதொடர்பாக, ‘டிடி நெக்ஸ்ட்’ ஆங்கில பத்திரிகையில் வெளியான செய்தியை மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி துரை ஜெயச்சந்திரன் தானாக முன்வந்து(சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்தார்.
பின்னர், நோயாளிகளுக்கு போடப்படும் ஊசி உடைவது ஏன்? என்பது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவ பணிகள் கழக நிர்வாக இயக்குனர் ஆகியோர் 4 வாரத்துக்குள் தங்களது விளக்கத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.