செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிகளுக்கு தடை விதித்தது ஐகோர்ட் மதுரை கிளை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கப் பணிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. #SterliteProtest #SterliteCaseVerdict

மாலை மலர்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், போராட்டக்காரர்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியது. போராட்டக்காரர்களை கலைக்க எவ்வளவோ யுக்திகள் இருந்தும், தேச விரோதிகளை சுடுவது போன்று சரமாரியாக சுட்டது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.