செய்திகள்

ப.சிதம்பரத்துக்கு எதிரான வருமான வரித்துறை நோட்டீசுக்கு தடை விதித்தது ஐகோர்ட்

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்துக்கு எதிரான வருமான வரித்துறை நோட்டீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் 2011-12-ம் ஆண்டிற்கான வருமான வரிக்கணக்கை மறு ஆய்வு செய்வதற்காக கணக்கு விவரங்களுடன் நேரில் ஆஜராகும்படி வருமான வரித்துறை கடந்த மார்ச் மற்றும் மே மாதங்களில் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

ஆனால், வரி கணக்கை மீண்டும் கணக்கிடுவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீடு செய்தார். அதில், தான் முறையாக வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்திருப்பதால், வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸ்களை ரத்து செய்து உத்தரவிடவேண்டும் எனக் கூறியிருந்தார்.