செய்திகள்

கிறிஸ்தவ பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை மாற்ற முடியுமா?- தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

கிறிஸ்தவ பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை மாற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யும்படி தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #LSPolls #ChristianSchoolsBooths

தமிழகத்தில் அடுத்த மாதம் 18-ம் தேதி பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதிலும் பல்வேறு பள்ளிகளில் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஏப்ரல் 18ம் தேதி பெரிய வியாழன் பண்டிகை என்பதால், கிறிஸ்துவ பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி தமிழ்நாடு பிஷப் கவுன்சில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

SCROLL FOR NEXT