சண்டிகர்:
அரியானா மாநில முதல் மந்திரி மனோகர் லால் கட்டாருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்த தகவலை மனோகர் லால் கட்டார் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அதில், வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன். ஒரு வாரமாக தன்னை சந்தித்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
கடந்த வாரம் தன்னுடன் தொடர்பில் இருந்த அமைச்சர்கள், அதிகாரிகள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என பதிவிட்டுள்ளார்.