சென்னை:
அகில இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தமிழகத்தில் இருந்து செல்லும் ஹஜ் பயணிகளுக்கு ரூ.6 கோடி மானியம் வழங்குவதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து தமிழகத்தில் யாரும் இதுவரை இந்த அளவு மானியம் வழங்கியதில்லை.
எனவே ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்கள் சார்பில் அவருக்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.